×

165வது வார்டு பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம்: நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் வாக்குறுதி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 165வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் நேற்று ஆதம்பாக்கம் பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஆதம்பாக்கம் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க அகலமான வடிகால் அமைப்பேன். மழைநீர் கால்வாய்களை அவ்வப்போது சீரமைப்பேன். வார்டு முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன்,’’ என்றார்.

வாக்கு சேகரிப்பின்போது, ஆலந்தூர் தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் ஆதம் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ஆர்.பாபு, நாகராஜ சோழன், இ.எஸ்.பாபு, எல்ஐசி பாபு, ஜி.ரமேஷ், என்.எஸ்.டி.கிறிஸ்டோபர், பால்ராஜ், கணேசன், சரவணன், இ.பாலாஜி, ஆர்.நிர்மல்குமார், சு.கதிரவன், சிவலிங்கம், கண்ணன், பச்சையப்பன், வினோத், ஆர்.பெருமாள், காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணை தலைவர் அய்யம்பெருமாள், பி.எஸ்.ராஜ், எஸ்.வடிவேல், லயன் காமராஜ், ஐ.செல்வம், ஏழுமலை, நரேஷ் ஸ்ரீராம், எஸ்.ரமேஷ், ஜெய்கணேஷ், மதிமுக சார்பில் கராத்தே பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : 165th Ward ,Nanjil Eeswara Prasad , Protected drinking water supply to the people of 165th Ward: Nanjil Eeswara Prasad Promise
× RELATED ஏரியா சபை உறுப்பினர்களின்...